Sunday, April 26, 2009

விடுதலைப் போரினில்.....

பாடல் : ம ணவாளன் இசை : எம் பி ஸ்ரீனிவாசன்

சுருதி : 1

விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே
தோழா ...... தோழா....
வீரர் உமக்கே வணக்கம் வணக்கம்
தோழா.... தோழா.... (விடுதலை)

காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில்
தாரகை போன்று ஜொலித்து நிற்கின்றீர்
போரிடும் எமக்கு புத்துயிர் தாரீர்
தோழா.... தோழா.... (விடுதலை)

இந்திய நாட்டின் விடுதலைப் போரில்
எண்ணற்ற வீரரை அர்ப்பணம் செய்தோம்
இதயக் கனவுகள் ஈடேறும் சத்யம்
தோழா.... தோழா.... (விடுதலை)

ஆயிரம் ஆயிரம் தோழர்கள் ரத்தம்
குடித்தெழுந்தே நிற்கும் கோரச் சமூகம்
தகர்த்தெறிவோம் மக்கள் சக்தியினாலே
தோழா.... தோழா.... (விடுதலை)

நமது குறிக்கோள்கள்

குறிக்கோள்கள்

1) அணுயுத்தப் பேரழிவிலிருந்து உலகைக் காத்தல், உலக சமாதான சக்திகளுடன் இணைந்து நிற்றல்.

2) அனைத்து நாடுகளது சுதந்திரத்தையும் மதித்தல், நிற வெறி மத‌வெறி, இன வெறி, பிற்போக்கு சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டஙகளை ஆதரித்தல்.

3) இந்தியாவின் சுதந்திரத்தையும், ஒற்றுமையையும் பேணிக் காத்தல், மதம் இனம் மொழி ஜாதியின் பெயரால் வெறித்தனங்களை கிளப்பிவிடும் தீய சக்திகளை எதிர்த்தல், நாட்டு ஒற்றுமைக்காக, மக்கள் ஒற்றுமைக்காக பாடுபடுதல்.

4) தேசிய மொழிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து, ம த சார்பற்ற அரசு கோட்பாடு, சாதீய ஒடுக்குமுறைகள் ஒழிப்பு ஆகியவற்றுக்காக போராடுதல்.

5) பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை எனும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் விடாது காத்து நிற்றல்.

6) உழைக்கும் மக்களது வாழ்க்கைப் போராட்டஙகளுக்கு துணை நிற்றல்.

7) காம வெறியூட்டும் ஆபாச கலை ‍ இலக்கியங்களை எதிர்த்தல்.

8) லஞ்சம், ஊழல், கடத்தல், கலப்படம், கள்ளச்சந்தை, கறுப்பணம் போன்ற சமூக விரோதச் செயல்களை எதிர்த்தல்.

9) பெண்ணினத்தை இழிவுபடுத்தும் எல்லாவிதமான பிற்போக்குத்தனங்களையும் சாடுதல்; மாதர் விடுதலைக்காகப் பாடுபடுதல்.

10) மூட நம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபடும் வகையில் விஞ்ஞான கண்ணோட்டத்தை வளர்த்தல்.

இத்தகைய நோக்கங்களுடன் கலை இலக்கியப் பணிகளில் ஈடுபடுவோம் என்று அறிவிப்பதுடன், மனித குலம் பெற்றுள்ள எல்லா அறிவுத் துறைகளும் எவ்வாறு மனிதகுல மேம்பாட்டுக்காகவே பயன் பட வேண்டும் என்று கூறுகிறோமோ அவ்வாறே கலை இலக்கியமும் மக்களது முன்னேற்றத்திற்காக பயன் பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.