Friday, November 5, 2010

ஏகாதிபத்திய ஒபாமாவே .....

2010 நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு
1994 ‍ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று BEAT நாடக குழு தாம்பரம் சிட்லபாக்கத்திலும், சென்னை அஷோக் நகரிலும் உள்ள வங்கி ஊழியர் குடியிருப்புகளில் நடத்திய நடை பயணத்தின்போது பாடிய பாடலை சமர்ப்பணம் செய்கிறோம்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
அவ்வை பாட்டி சொன்ன மொழி
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்லுறாங்க.

இஞ்சிக்கு மிஞ்சின மருந்தில்லைன்னு
அம்மாஞ்சி தாத்தா சொல்வாறு
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்லுறாங்க.

மஞ்சளுன்னா மங்கலமின்னு
மங்கையரெல்லாம் சொல்வாங்க‌
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்றாங்க.

இந்தியாவை நாடு பிடிக்க
டங்கல் திட்டம் போட்டாரு
பிடிச்சா என்ன பிடிக்கடுமின்னு
நரசிம்மராவு சொல்றாறு

மானங்கெட்ட ஜாக்ஸன் என்று
கட்டபொம்மன் சொன்னாறு
எட்டப்பந்தான் என் குரு என்று
மன்மோகன்சிங் சொல்றாறு

கப்பலோட்டி சிறை சென்றவர்
செக்கிழுத்த சிதம்பரம்
பங்கு பிடித்து பணம் சேர்த்தவர்
பாவன்னா சிதம்பரம்

இப்படியே விட்டொமுன்னா
நாட்டை ஏப்பம் விடுவாங்க‌
மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து
எதிர்து நிப்போம் வாருங்க‌

குட்ட குட்ட குனிய மாட்டோம்
எதிர்த்து நின்னு எட்டி உதைப்போம்
சின்னஞ்சிறிய க்யூபாவைப்போல்
சீறிப் பாய்வோம் வாருங்க.

சமையலறைப் பெண்களெல்லாம்
அரசியலைப் பாக்கணும்
பெண்களெல்லாம் முடிவெடுத்தா
டங்கல் திட்டம் தூளாகும்

கிச்சிலி சம்பா பச்சரிசி
சோறாக்கினா ஜோருங்க ‍அதை
ஒழிச்சுக் கட்ட அடி உரத்திலே
மருந்து வச்சது யாருங்க‌?

......... சி பி ரவிசங்கர்

நாட்டுபுற பாடல்

ஏஹேஹே....... சல் சல் சல் சல் ..........

வாழக்கா ஏத்தும் வண்டி வடசேரி போகும் வண்டி
வாழக்கா வித்தோடனே வளயல் பண்ணி போடுறேன்

ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி
ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி

சல் சல் சல் சல் ..........

பூசணிக்கா ஏத்தும் வண்டி பூலோகம் போகும் வண்டி
பூசணிக்கா வித்தோடனே பொடவ வாங்கித் தாரேன்

ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி
ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி

பிச்சி பிச்சி பிச்சி பிச்சீ
மாமோ பிச்சிப் பூ மல்லிக பிச்சிப்பூ (5)

ஏரியிலே எலந்தம்பழம் என் தங்க வச்ச மரம்
காயும் இல்ல பூவும் இல்ல கண்டவுக வச்ச மரம்

மாமோ பிச்சிப்பூ மல்லிக பிச்சிப்பூ (5)

பொண்ணு வருது பொண்ணு வருது
பொட்டி வண்டியிலே
பொண்ண பெத்த தாயார் வருது
டொக்கு வண்டியிலே

மாமோ பிச்சிப்பூ மல்லிக பிச்சிப்பூ (5)

அத்தான் வந்தாங்க அத்தான் வந்தாங்க‌
ஆத்தங்கரையிலே பாவக்காய அறுக்கச் சொன்னாங்க‌
அத்தான் வந்தாங்க அத்தான் வந்தாங்க‌
பின்னே கொஞ்சம் நெய்ய ஊத்தி வறுக்கச் சொன்னாங்க
கம கம கம கம உம் ... ஹா‌
பின்னே கொஞ்சம் நெய்ய ஊத்தி வறுக்கச் சொன்னாங்க
அத்தான் வந்தாங்க அத்தான் வந்தாங்க‌

தும் ஹும் தும் ஹும் ......
தன்னே நானே நானே நன்னே நானே நன்னே
ஆமாம் சொல்லு
தன்னே நானே நானே நன்னே நானே நன்னே
அப்படி சொல்லு

மூக்குத்தி தன்னே நானே மினு மினுங்க‌
முகமெல்லாம் த்ன்னே நானே சோதி மின்ன‌
தன்னே நானே..................

சாந்திடிக்க தன்னே நானே சருகுதிர‌
சாந்து மேலே தன்னே நானே பூவுதிர‌
தன்னே நானே ...................

கப்பி கட்டை தன்னே நானே கலகலங்க‌
கை வளையல் தன்னே நானே சோதி மின்ன
தன்னே நானே ................

உழுது தொளி கலக்கி ஒண்ணு ரெண்டா நாத்தரிச்சு
பழுதுபடாமலிங்கு பக்குவமா நட்டு வாங்க‌

நாத்தரிச்சு நானறியேன் நடவு நட்டு நானறியேன்
சேத்துக்குள்ள எறங்கிக்கிட்டு செல்ல முகம் வாடுறேனே

தண்டட்டி போட்ட புள்ளே தானா வளர்ந்த புள்ளே
மேலேடு போட்ட புள்ள அடி தங்கமே தங்கம்
மெலியறேண்டி ஒன்னாலே அடி தங்கமே தங்கம்
மெலியறேண்டி ஒன்னாலே

தோச திங்க ஆசையாகுதே பட பட பட சுட சுட சுட (3)
சொய்ங்...................... ஹாங்
பச்ச மொளகா நறுக்கி வச்சு
பசுவ வெண்ணை உருக்கி வச்சு
பத்து தோச அடுக்கி வச்சு
பப்படத்த பொரிச்சு வச்சு
தோச திங்க...ஆ
தோச திங்க ஆசையாகுதே பட பட பட சுட சுட சுட (3)

ஆஹா .... ஓஹோ

புன்னை மரத்து கொம்பை வளைத்தொரு
தொட்டில் தொங்குது அதில்
பூவினைப் போல மேனி படைத்த
குழந்தை துங்குது
ஆரிரோ ஆராரோ ... ஆரிரோ ஆராரோ

என்ன நினைத்து காலை உதைத்து பாப்பா சிரிக்குது
அதன் சின்ன சின்ன மணி கண்ணுக்குள்ளே
ஒரு நாடகம் நடக்குது

புன்னை மரத்து ..........

Saturday, October 23, 2010

ஹிந்தி தின விழாவில் பீட் சேர்ந்திசை

செப்டம்பர் பத்தாம் தேதியன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சென்னை தலைமை அலுவலகத்தில் ஹிந்தி தின விழாவில் பீட் குழுவின் பன் மொழி பாடல்கள் சேர்ந்திசை நடைபெற்றது.

Saturday, October 16, 2010

பாருக்குள்ளே நல்ல நாடு

பாரதியார்...... M B ஸ்ரீநிவாஸன்...... சுருதி 7

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

ஞானத்திலே பர மோனத்திலே ‍ உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த‌
கவிதையிலே உயர் நாடு

பாருக்குள்ளே...

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈன்றிடும்
காலி இனத்தினிலே உயர் நாடு

பாருக்குள்ளே...

பூமி

அறிவொளி இயக்கப் பட்டறையில் உருவானது

ஆண்டுகள் ஆண்டுகளாய்
நம்மின் நினைவுகளில்
என்றும் அழியாதொரு பூமி
வருமொரு தலைமுறைக்கு நாமும்
திருப்பித் தரவேண்டிய‌
ஜன்ம கடனல்லவோ பூமி

இது நம் முன்னோடிகள் தந்த சொத்தல்ல‌
இது கயமைக் கூட்டத்தார் சுரண்டிக் கொழுத்திட‌
அளவின்றி சுரக்கும் பாத்திரமல்ல‌

மலைகளை மார்பில் தழுவிக்கிடக்கும் தரைகளில்
இச்சமவெளிகளில்
யுகாந்திரங்கள் பலவாய்
இம் மண்ணில் தணலும்
தண்மையும் மரமும் தளிருமாய்

உள்ள கிளர்ச்சி தரும் பேரெழிலாய்
மர நிழலில் தாலாட்டி மடி மீதில் கிடத்தி
தலைமுறைகள் பலவற்றை ஊட்டி வளர்த்து

இடியைப் பிறப்பிக்கும் கொடு மின்னல்கள்
நம் இதயங்களை கீறி பாய்ந்த போதில்
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து
அவளே அபயமளித்தாள் மடி தந்து
தரையின் நேசம் போல் வழிந்தொழுகும் நதிகள்
நம்மின் தாகங்களுக்கு குளிர் நீர் ஈந்து
நம்முள் எரியும் பசித்தீ தணித்திட‌

வயல்களில் கதிர்கள்
மரங்களில் கனிகள்

நம்மின் அந்தி வானம் சிவந்திட‌
குருதியில் மூழ்கிடும் சூரியன் உயர்ந்திடும் சந்திரன்
நம்மின் இரவுகளை பால் கடலில் குளிர்ப்பிக்க‌
புலரும் வரை எரிகின்ற சந்திரன்

எங்கே பால் நிழல் சுரக்கும்
மரமெல்லாம் எங்கே?

அலறி வரும் கொடுவாளின்
பல்லில் சிதையும்
தூரத்து மாளிகையின் பணப்பெட்டி நிறையும்

எங்கே மண்ணின் விரி மார்பில் கசிந்தொழுகும் நதிகள்
கழிவும் கிருமியும் நதியில் கலந்திட‌
ஆஸ்திகள் மாளிகை மேலும் உயரும்

விழித்திடுக விழித்திடுக விழித்தெழுந்திடுக‌
எழுந்திடுக விழிதெழுந்திடுக‌

பழங்கால தலைமுறைகள் சீதனமாய் தந்ததொரு
பாட்டன் சொத்தல்ல பூமி

வருமொரு தலைமுறைக்கு நாமும்
திருப்பித் தர வேண்டிய ஜென்ம கடனல்லவோ பூமி
மனிதனை மனிதனாய் மாற்றிய பூமி
கொடியவர்கள் பாலைவனமாக்கும் இப்பூமி
சோலை வனமாகட்டும்
இனி நம் கையில் பூமி

Saturday, September 25, 2010

நல்ல காலம் வருகுது

பாடல்: பாரதியார். இசை : எம் பி ஸ்ரீநிவாஸன் ஸ்ருதி : 2 1/2


நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளி
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு
சொல்லு சொல்லு
நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது

டிண் டிண் டிண் டிண் .........

தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
பண்ணினால்..... ஆஹா
போவான் போவான் ஐயோ என்று போவான்
நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
எந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திரம் எல்லாம் வளருது வளருது
நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது

சாமிமாருக்கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது சுறு சுறுப்பு விளையுது
எட்டு லெட்சுமியும் ஏறி வருகுது
பயம் தொலையுது பாவம் தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது
நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது

Sunday, September 12, 2010

சுகானுபவம்

ஜூலை மாதம் ஏழாம் தேதி புதன் கிழமையன்று முற்போக்கு எழுத்தாளரும், கலாரசிகருமான கோனேரி ராஜபுரம் திரு ராமச்சந்திர வைத்யநாத் அவர்களின் இரண்டாவது மகளின் திருமண நிகழ்ச்சியில் பீட் குழுவினர் சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்' என்ற கவிதை வரிகளை முக்கியப்படுத்தி இது நம்ம வீட்டு கல்யாணம் என்று அனைவரும் உணரத்தக்க வகையில் திருமண நிகழ்வு ஒவ்வொன்றையும் முழு அர்த்தமுள்ளதாக இருக்கும்படி திட்டமிட்டு நடத்தியிருந்தார். சேர்ந்திசை நிகழ்ச்சியைப்பற்றி அவரின் கருத்துக்கள்..... இதோ அவரே எழுதுகிறார்.

ஆயிரம் பொய் சொல்ல அனுமதி இருந்தபோதிலும் பொய்யேதுமின்றி திருமணத்தை நிச்சயித்த பின்னர், நிகழ்ச்சிகளை இறுதியாக்கும் நிலையில்தான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்ற கருத்து எழுந்தது.

மரபு வழியாகவே இசை ஞானமும் நுட்பமாக விவாதிக்கும் பாங்கும் உடைய எங்கள் அனைவருக்குமே, திருமண வைபவத்தில் மெல்லிசை என்ற பெயரால் செவிப்பறையை அதிரவைக்கும் கோர்வையையும், மேம்போக்கான கருத்துக்கள் அல்லது ஆபாசமான வக்கிர வரிசைகளையும் கேட்க வேண்டுமா என்ற விவாதம் உருவாகியது. தவிர நிகழ்ச்சிப் போக்கில் இடைவெளியை நிரப்பவே திருமணத்தில் இசை என்பதிலிருந்து, பரிபூரணமாகவே இசை வெளியில் சஞ்சரிப்பது மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்ற பொதுவான கருத்து உருவாகியது. ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது இரு தரப்பினர்க்கும் சோர்வைத் தருமோ என்ற சந்தேகமும் இருந்தது.

திருமணத்தின் ஒரு பகுதியாக 'ப்ரத்யேகமான இசை நிகழ்ச்சி' யை நடத்துவது என்று சற்றே துணிச்சலுடன் முடிவெடுத்த பின்னர் மெல்லிசை அல்லாது எந்த நிகழ்ச்சியை நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. குடும்ப நண்பர் என்ற ரீதியில் பி.எஸ்.என்னை அழைக்கலாம், மாமியை ஜலதரங்கம் வாசிக்கச் சொல்லலாம் என்று பல்வேறு கருத்தோட்டங்கள் உருப்பெற்ற நிலையில்தான் சேர்ந்திசை குறித்து அசை போட்டோம்.

அறுபதுகளில் வானொலியில் ஞாயிறுதோறும் காலை சேர்ந்திசை கேட்பது, அத்தோடு இணைந்து இருப்பது என்பது ஒரு ரசமான அனுபவமே. சதீஷ் பாட்டியா, எம்.பி.எஸ், கனு கோஷ், டி.எல்.ராய், வினய் சந்திர மெளத்கல்யா போன்ற இசையமைப்பாளர்களும் இக்பால், பாஸ்கரன், தாசரதி, ப்ரேம் தவான், சானி குருஜி, நீனு மஜூம்தார் போன்ற இசையப்பாளர்களும் அன்றைய தினம் ஆராதனைக்குரியவர்களாய் இருந்தனர். 'ஜய ஜன் பாரத் ஜன் மன் அபிமத் ஜன் கண் தந்திர விதாதா', 'சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ஹம் புல்புலேன் ஹைன் இஸ்கி யே குல்ஸிதான் ஹமாரா', பில்லல்லாரா பாபலல்லாரா ரேபடி பாரத பெளரல்லாரா', ஜன்மகாரினி பாரதம் கர்ம மேதினி பாரதம்', ஆகாச கங்கா சூர்ய சந்திர தாரா சந்தியா உஷா கொய்னா நதி' போன்ற பாடல் வரிகள் இன்னும் மனசில் திப்பி திப்பியாய் இருக்கின்றதென்றால் அதன் வடிவம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

ஒரு மாறுபட்ட இசை வடிவமாக இருக்கும் சேர்ந்திசை என்ற அடிப்படையில் திருமண நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றது. ஏற்கனவே சுதந்திர தினப் பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பீட் குழுவினரின் நிகழ்ச்சியை திறந்த வெளியில் நடத்திய அனுபவத்தின் காரணமாக அவர்களையே அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

மாலை என்று சொல்வது தவறுதான். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் நிகழ்ச்சி துவங்கியது. அங்கும் இங்கும் குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். நலங்கு முடிந்து உற்றார் உறவினரும் நண்பர்களும் சோர்வு நிலையில் இரவு உணவிற்கு சற்று நேரமாகும் என்ற காரணத்தினால் நாற்காலியில் சற்றே கண் மூடி களைப்பாறிக் கொண்டிருந்தனர். நெருக்குதல் ஏதும் இல்லாத காரணத்தினால் பணியாளர்களும் சற்றே ஓய்வில், அணா பைசா கணக்கு பார்த்துக்கொண்டு நாங்களும் திசைப் பூண்டை மிதித்த நிலையில்.

ஆனந்த் மேடையில் வரிசையாய் நின்ற குழுவினருக்கு பூச்செண்டை அளித்ததும், குணா மைக்கில் அறிவித்ததும், ரவிசங்கரின் அறிமுக உரையும் வழக்கமானதொன்றாகவே கருதினோம்.

தபேலா, கீ போர்ட் துணையுடன் குரல்கள் சேர்ந்திசைக்கத் தொடங்கியவுடன் அனைவருமே விழிப்புற்றோம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

பாடிய பாடல் வரிசையை நினைவில் கொள்ளவில்லை என்றாலும் பல்வேறு பாடல் வரிகள் இன்னும் பிரமிப்பை அளிக்கிறது. பாரத சமுதாயம் வாழ்கவே, பாடும் பறவைகளே போன்ற பாடல்கள் இன்னும் ரீங்காரம் செய்கிறது என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல என்பதை நிகழ்வினைக் கேட்டவர்கள் உணர்வர்.

அரங்கில் கூடியிருந்த சொற்பமான எண்ணிக்கையில் இருந்தவர்கள் இசைப் பற்றிய ஞானம் உடையவர்கள் மற்றுமின்றி மற்றவர்களுமே இந்த இசை அருவியை பேரானந்தமாக உணர்ந்தனர். மூழ்கினர். பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்த பணியாளர் சரோஜா அப்படியே அதைப் போட்டுவிட்டு அரங்கை நோக்கி தன் பார்வையை திருப்பியது சாதாரணமான விஷயமல்ல. 'வேற மாதிரி இருக்கு, காதை அமுக்கலை, சந்தோஷத்தை உற்சாகத்தை அளிக்கிறது' என்று அவர் சொன்னது மட்டுமல்ல அனைவரின் கருத்தோட்டமாகவே இருந்தது.

இந்த இசை வடிவம் காலம் காலமாகவே இருந்து வந்த போதிலும், புழக்கத்தில் இல்லாததினால் மக்களுக்கு புதியதாகவே இருக்கிறது. அரங்கில் இருந்த சம்பிரதாயமான இசை வடிவங்களை அறிந்து கேட்டு வரக்கூடியவர்கள் இந்த நிகழ்ச்சியை உற்று நோக்கினர்.அவர்களை இது பரவசப்படுத்தியது என்று சொல்வதைக் காட்டிலும் வெகுவாக பாதித்தது என்றே கூறலாம். வாரப் பத்திரிக்கையொன்றில் வெளியானது பற்றிய அறிவிப்பின் பேரில் சேர்ந்திசைத்த கவிதை வரிகளுக்கு இசை வடிவம் அளித்தது பற்றி பலரும் பிரமித்தனர். வெகுவாக பிரஸ்தாபித்தனர்.

இரண்டு மூன்று நாட்கள் ராக் கண் விழித்து முறையான உணவின்றி சோர்வுற்று மெற்கொண்ட பணி நிறைவாக முடியும் வகையில் இந்த சேர்ந்திசை நிகழ்ச்சி அமைந்தது எங்கள் அனைவருக்குமே புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது.

இருப்பினும் பலரின் கருத்தோட்டத்தின் அடிப்படையில் ஒரு சில அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், அருணகிரி நாதர் போன்றோரின் அழகும் செறிவும் மிக்க பாடல் வரிகளை தேவைக்கேற்ப கையாள முடியும்.

நாம சங்கீர்த்தனம் போன்று பார்வைகளையும்ப்ங்கேற்க வைக்கும் வகையில் எளிய பாடலொன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

உடை விஷயத்தில் ஒருங்கிணைப்பு ஏற்படும் வகையில் யோசனை செய்யலாம். அது பார்வையாளர்களை ஈர்ப்புடையதாக்கும்.

Saturday, July 24, 2010

We shall overcome - Martin Luther King

we shall overcome we shall overcome
we shall overcome some day
oh deep in my heart I do believe that
we shall overcome someday

Ham honge kaamyaab honge kaamyaab
honge kaamyaab yek dhin
oh man me hai bhiswas pooraa hai bhiswas
honge kaamyaab yek dhin

we'll walk hand in hand we'll walk hand in hand
we'll walk hand in hand some day
oh deep in my heart I do believe that
we shall overcome some day

Amraa gorbho jai Amraa gorbho jai
Amraa gorbho jai nishchai
oh Bhoogey aache go ovir prodhaai
amraa gorbho jai nischai

we shall live in peace we shall live in peace
we shall live in peace some day
oh deep in my hear I do believe that
we shall overcome some day

Mundhugu payanishaam munu Mundhugu payanishaam
Mundhugu payanishaam anudhinamu
aathma viswaasam jadhagaa thimira lokabhu cheranunchi
munu mundhugu payanishaamu memu

we are not alone we are not alone
we are not alone today
oh deep in my heart I do believe that
we shall overcome someday

Nammal jayikkum Nammal jayikkum
Nammal jayikkum oru naal
oh yenda manasil dhrida wishwaasam
Nammal jayikkum oru naal

we are not afraid we are not afraid
we are not afraid today
oh deep in my heart I do believe that
we shall overcome some day

Naavu nibhahi sonaa Naavu nibhahi sonaa
Naavu nibhahi sonaa ondhu dhinaa
oh hridhayavadhindaa nambuvenu
Naavu nibhahi sonaa ondhu dhinaa

The struggle will make us free The struggle will make us free
The struggle will make us free some day
oh deep in my heart I do believe that
The struggle will make us free some day

நாங்கள் வெல்லுவோம் நாங்கள் வெல்லுவோம்
நாங்கள் வெல்லுவோம் ஒர் நாள்
மன உறுதியுடன் நம்புகிறோம்
நாங்கள் வெல்லுவோம் ஒர் நாள்.

Saturday, July 10, 2010

FMSRAI - BIOCHEM ‍ அகில இந்திய மாநாட்டில் BEAT

ஜூன் 6 , 2010 அன்று சென்னையில் நடைபெற்ற‌ FMSRAI - BIOCHEM ‍ அகில இந்திய மாநாட்டில் BEAT குழுவின் பன் மொழி சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Friday, June 11, 2010

கோடைக்கானல் கோடை விழாவில் பீட் சேர்ந்திசை

27.05.2010 வியாழக்கிழமையன்று மதியம் 12 மணியளவில் கோடைக்கானல் ப்ரியன்ட் பூங்காவில் நடைபெற்ற கோடைவிழாவில் BEAT குழுவினர் சேர்ந்திசை நிகழ்ச்சி நடத்தினர். சுற்றுலா வந்திருந்தோர் மத்தியில் பாடியது ஒரு புது அனுபவமாக இருந்த்து.

Friday, May 21, 2010

பள்ளு பாடுவோமே - 2

Ref : The Hindu, dated : May 20, 2010

CD of a choir released


The Madras Youth Choir


Innovative harmoniser par excellence M.B. Srinivasan’s (MBS) Madras Youth Choir recently released a CD titled ‘Pallu Paduvome’ at a function held at TAG Centre, Alwarpet. Releasing the CD Justice K. Chandru stated that as a rare gesture, Srinivasan’s troupe had performed at his marriage.

Receiving the first copy, journalist Gnani readily offered his ‘Keni’, the backyard of his house for the choir to perform for a guaranteed audience and thus become more popular among the masses. Musician T.M. Krishna wanted the choir to set up independent outfits in places beyond Chennai, such as Madurai or Tiruchi and thus provide the necessary momentum for this genre of music to spread as a movement.

Augustine Paul, director, MMA Choir, said he was ready to collaborate with the Madras Youth Choir in its musical ventures. K. Subramaniam, founder-president in his welcome address underlined the fact that Srinivasan’s music was never uni-dimensional and thus embraced all kinds and facets of music. D. Ramachandran performed the function of master of ceremonies.

The event concluded with the tasteful and committed rendering of compositions of MBS in Tamil, Telugu, Kannada, Malayalam and Bengali by the Madras Youth Choir. The CD that was released was a live recording of a concert held in 2009 by Charsur Digital Workstation.

பள்ளு பாடுவோமே - 1

Ref: The Hindu 14th May, 2010


Perfect harmony

As its 40th anniversary nears, the Madras Youth Choir releases its first CD



Striking a patriotic chord The Madras Youth Choir.

They sing Indian classical and light music, but with harmonies, counterpoint and chords. They have a repertoire of nearly 120 songs in 16 Indian languages (with the odd Russian and French number thrown in for good measure). And they've been at it — without a break — for the last 40 years.

The Madras Youth Choir, one of the oldest Indian choral groups in existence today, has been part of Chennai's music scene since 1971, performing, doing workshops and spreading the word on their special brand of music. Now, as their 40th anniversary draws near, the group will be releasing Pallupaaduvomey, their first CD, a recording of their performance at the Russian Cultural Centre last December.

“We've lacked funds until now to bring out CDs — we did bring out a cassette in 1989, but we didn't even have the money to make any copies!” says D. Ramachandran, secretary of MYC for the last 37 years. “We organised the performance with great difficulty last year and requested a company to record it for us.”

The beginnings


It all began in 1970, when Vasanthi Devi (along with K.S. Subramanian and the late Zahida Srinivasan) put together a group of school and college students for a patriotic music programme on All India Radio. What was meant to be a one-off performance ended up leading to the formation of the MYC under the aegis of the late M.B. Srinivasan, a pioneer of Indian choral music. “He introduced Western choral techniques into Carnatic and Hindustani classical and light musical tunes composed by him and set to the lyrics of nationalist poets — it had never been done before in Madras,” says Ramachandran.

AIR went on to form four such choral groups in Madras, Delhi, Bombay and Calcutta, with Srinivasan heading the one in Madras. Eventually, says Ramachandran, most of the members of the Madras AIR choir ended up joining MYC. “That included famous members such as Sudha Raghunathan, Rajkumar Bharathi, C.O. Anto and Udipi Gopalakrishnan,” he says. In the years that followed, the MYC performed at several choral music festivals in Delhi and all over India, creating a niche audience in the process, and even inspiring the formation of similar choirs in places such as Thiruvananthapuram. “This is very serious music — on patriotic themes, and with no instruments but for two harmoniums and two tablas for sruthi and taal — but we've always had a select listener base,” says Ramachandran. “Even when we're not performing, we meet to practise — rain or shine — every Sunday between 3.30 p.m. and 6.30 p.m. because this is complex music, technically.”

They also conduct regular workshops at schools and help children form choirs of their own. Today, the Madras Youth Choir may not be as young as it once was — half the members are above the age of 50 — but their enthusiasm for their unique music endures. “We're young at heart,” says Ramachandran with a laugh. “And we believe that as long as we sing together, no one really grows old!”

Sunday, March 14, 2010

தேனா வங்கி ஊழியர் சங்கத்தில் பீட் சேர்ந்திசை

மார்ச் மாதம் ஏழாம் தேதியன்று தேனாம்பேட்டை நரேஷ் பால் மையத்தில் தேனா வங்கி ஊழியர் சங்கத்தின் உதவி தலைவர் திரு பாலகிருஷ்ணன் அவர்களின் பணி பாராட்டு விழாவில் பீட் குழுவினரின் சேர்ந்திசை நடைபெற்றது

மருத்துவ பிரதிநிதிகள் மற்றும் விற்பனையாளர்கள் சம்மேளன மாநாட்டில் பீட் குழுவின் சேர்ந்திசை...

சென்ற ஜனவரி மாதம் பத்தாம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற மருத்துவ பிரதிநிதிகள் மற்றும் விற்பனையாளர்களின் சம்மேளன மாநாட்டில் பீட் குழுவின் சேர்ந்திசை நிகழ்ச்சியில் பன் மொழி பாடல்கள் பாடப்பட்டன.