Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Saturday, October 3, 2009

பிராகாரம் நுழைந்தவுடன் ........

பாடல்: ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி

ப்ராகாரம் நுழைந்தவுடன் கனியாகிவிடுகிறது ‍ எலுமிச்சை
ப்ராகாரம் நுழைந்தவுடன் தீர்த்தமாகிவிடுகிறது தண்ணீர்
ப்ராகாரம் நுழைந்தவுடன் ப்ரசாதமாகிவிடுகிறது திருநீரும் பொட்டும்
எந்த மாற்றமும் இன்றி வெளியேறுகிறான் பக்தன்

அந்த புறாக்கள்........

பாடல்: நெல்லை ஜெயந்தன்ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி


அந்த புறாக்கள் அஃறிணை
குருத்வாரா ஒரமும் கூட்டமாய் இரை தேடலாம்
சிலுவைகள் மீதமர்ந்தும் சிறகுகள் கோதலாம்
தர்கா வாசலில் தண்ணீர் பருகலாம்
ஊர்வலமாய் தெரு எது வழியும் திரும்பலாம்
எல்லாம் முடிந்து கோபுர உச்சியில் கூட்டில் அடையலாம்
தெரிந்தால் சொல் திணை மாறும் வழி.