Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

Tuesday, November 17, 2009

ஸங்கீத் ஸ்வாகத்தில் பீட் குழுவின் பாடல்கள்

பீட் குழுவின் சேர்ந்திசைக்குழுவின் மலேசிய இசைப் பயணத்தில் பல சிறப்புகள் உள்ளன.

வெளி நாடு சென்று நிகழ்ச்சி நடத்திய முதல் தமிழ் சேர்ந்திசைக்குழு என்று உறுதியாகச் சொல்லலாம்.

திருக்குறளை சேர்ந்திசையில் பாடிய முதல் குழு என்று சொல்லலாம்.

புதுக் கவிதைகளை சேர்ந்திசையில் பாடிய முதல் குழு என்று சொல்லலாம்.

சேர்ந்திசை முன்னோடி திரு எம் பி ஸ்ரீநிவாஸன் அவர்களின் சிறந்த மாணவியான திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் இசையமைப்பில் அதிக எண்ணிக்கையிலான் பாடல்களை பாடியுள்ளோம்.

திருக்குறள் உலகப்பொதுமொழி என்பதால் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கிராமிய இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை ஆகிய இசை வடிவங்களில் இசையமைக்கப்பட்டுள்ளது. குறளின் பொருளுக்கு ஏற்ப ராகம், மெட்டு, சேர்ந்திசை நுட்பங்கள் மிக நேர்த்தியாக பயன்படுத்தப் படுள்ளது.

புதுக்கவிதைகள் மிகக்குறைந்த வரிகளைக் கொண்டதாக இருந்தாலும் சேர்ந்திசைப் பகுதிகள், முன்னிசை, இடை இசை, முடிவு ஆகியவை கவிதையின் பொருளை சிறப்பாக உயர்திப்பிடிக்கும் வகையில் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.

பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசை வகையில் இருக்கும் வண்ணம் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கிராமிய இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை ஆகிய இசை வடிவங்களில் இருந்தன. திருக்குறள், புதுக் கவிதைகள், பாரதியின் பாடல்கள், கிராமியப் பாடல்கள் ஆகியன‌ பெண் சமத்துவம், உலக அமைதி, மத நல்லிணக்கம், சுதந்திர தாகம் முதலிய பல்வேறு கருத்துக்களை கூறுவதாக இருந்தன. சேர்ந்திசை முன்னோடி எம் பி ஸ்ரீனிவாஸன் அவர்களின் இசையமைப்பிலான பாடல்களூம் இருந்தன.

திருக்குறள், பாரதியின் காக்கைச் சிறகினிலே, வாழைக்கா ஏத்தும் வண்டி என்ற கிராமிய பாடல் ஆகியன பெறுத்த வரவேற்பைப் பெற்றன. மொழி தெரியாதவர்களுக்குக் கூட வாழைக்கா ஏத்தும் வாண்டி என்ற பாடல் மிகவும் பிடித்துவிட்டது. அதுதான் கிராமியப் பாடலின் சிறப்பு.

சினிமா இசை, பக்தி இசை ஆகிய இரண்டையும் தாண்டி சிறந்த கருத்துக்களை கூறும் சிறந்த வடிவமான சேர்ந்திசை வடிவில் பாடும் குழு என்ற பாராட்டை பெற்றது. குறிப்பாக சுருதிலயா குழுவினரின் பாராட்டைப் பெற்றது. பெரும் நிறுவனங்களின் கையில் இருந்து கொண்டு அவர்கள் தரும் இசையைத்தான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுள்ள நிலைமையை மக்களுக்கான இசையை இயக்கமாக கொண்டு செல்லவாய்ப்புள்ள வடிவமாக பார்க்கப்பட்டது. "சினிமா பாடல்கள் நிகழ்ச்சி என்று நினைத்து வந்தேன் ஆனால் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது. சென்னை வரும்போது கேட்க விரும்புகிறேன்" என்று கோலாலம்பூர் சுற்றிப்பார்க்க சென்ற இடத்தில் நிகழ்சியைப் பார்த்த ஒருவர் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு வினவினார். அந்த நிகழ்ச்சியை பார்க்காமல் வேறு வேலையாகச் சென்றுவிட்டேனே என்று அவருடைய நண்பர் வருத்தப்பட்டார். கடல் கடந்த இடத்தில் இப்படியான பாராட்டை கண்டு மகிழ்ச்சியடைந்தோம்.

பாடல்களின் பட்டியல்
1. திருக்குறள்: ஈன்ற பொழுதில், குழலினிது, கற்க கசடற, ஒழுக்கம் விழுப்பம், துப்பார்க்கு துப்பாய, நன்றிக்கு வித்தாகும்
2. நாரை நடக்கும் என்று தொடங்கும் புதுக் கவிதை
3. மனுலாகோ என்று தொடங்கும் கபீரின் ஹிந்தி மொழி ஹிந்துஸ்தானி பாடல்
4. அந்தபுறாக்கள் என்று தொடங்கும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பாடல்
5. மேற்கத்திய இசை ( ஒபேரா இசை போன்றது)
6. ஜய ஜய பாரத என்று தொடங்கும் பாரதியின் பாடல்
7. பாடும் பறவைகளே என்ற கே சி எஸ் அருணாசலத்தின் பாடல்.
8. காக்கைச் சிறகினிலே என்று தொடங்கும் பாரதியின் பாடல்
9.வாழைக்கா ஏத்தும் வண்டி என்று தொடங்கும் கிராமியப் பாடல்.

ஸ்ருதிலயா குழுவோடு செர்ந்து பாடிய பாடல்கள்
1. அச்சமில்லை என்று தொடங்கும் பாரதியின் பாடல்
2. செம்பருத்தி பூவின் சிறப்பை மலேசிய, சீன, தமிழ் மொழிகளில் பழைய தமிழ் சினிமா பாடல் மெட்டில்
3. ஆணும் பெண்ணும் என்று தொடங்கும் பாரதியின் பாடல்
4. வானம் ஒன்றுதான் என்று தொடங்கும் உலக அமைதியை வலியுறுத்தும் பாடல்
5. ஒவொரு பூக்களுமே என்று தொடங்கும் சினிமா பாடல்
6. மதுரை மணி ஐய்யரின் மேற்கத்திய இசைக் கோர்வை
7. காற்றினிலே வரும் கீதம் என்று தொடங்கும் எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் மீரா பட பாடல்.

பதின் வயதினர் அதிகமாக இருந்த ஸ்ருதிலயா குழுவினரோடு சேர்ந்து பாடியது பீட் குழுவினருக்கு பெருத்த உற்சாகத்தைத் தந்தது.

Tuesday, September 8, 2009

புதிய பாடல்கள் புதிய இசை அமைப்பு

பீட் சேர்ந்திசைக் குழு தற்போது புதிய பாடல்கள் பலவற்றை கற்று வருகிறது.

மலேசிய நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தவுடனே புதிய பாடல்களைச் சேர்க்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புதிய பாடல்கள் புதிய செய்திகளை சொல்பனவாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பழைய பல்லவி, அனு பல்லவி, சரணம் என்கிற அமைப்பு புதிய செய்திகளைச் சொல்ல ஏதுவாக இல்லை. புதிய செய்திகள் அனைத்தும் புதுக் கவிதைகள் பாணியில்தான் உள்ளன.

பாரதியைப்பற்றி பாரதி தாசன் பாடியுள்ள தமிழகம் தமிழுக்குத்தகும் என்ற கவிதை பழைய பாணி பாடல் கிடையாது. அந்த பாடலுக்கு இசையமைத்துள்ள திரு எம் பி ஸ்ரீனிவாஸன் அவர்கள் இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு ஒரு நடை அடுத்து வரக்கூடிய ஓரிரு வரிகளுக்கு ஒரு நடை என்று பாடல் முழுவதற்கும் பல் வேறு நடைகளில் இசையமைத்து புதுமை புரிந்திருந்தார். அந்த வழிகாட்டலில் ஒரு சில புதுக்கவிதைகளை தேர்ந்து எடுத்து ஏற்கனவே இசையமைத்திருந்தார் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள்.

ஆனால இவை பாரதிதாசனின் கவிதைகளைப்போல் நீண்ட கவிதைகள் அல்ல. ஆனந்த விகடனில் வெளிவந்து பரிசு பெற்ற சிறு சிறு புதுக் கவிதைகள்.

இவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இசையமைத்து குழுவிற்கு பயிற்சி கூட துவங்கினார். திருக்குறளுக்குடக் கூட இசையமைத்து பயிற்சி தந்தார். திருக்குறள் மட்டும் பாண்டிச்சேரியில் நடைப்பெற்ற வங்கி ஊழியர் (பெஃபி டி என்) மாநாட்டில் அரங்கேற்றினோம். ஆனால் புதுக்கவிதைகள் பயிற்சி மட்டும் தொடரப்படாமல் இருந்த்து. தற்ப்போது அது துவங்கப்பட்டு மூன்று புதுக்கவிதைகள் மற்றும் பாரதியின் காக்கைச் சிறகினிலேயும் சென்ற சுதந்திர தினத்தன்று சுதந்திர போராட்ட தியாகி பி ராமமூர்த்தி இல்லத்தில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் அரங்கேற்றப்பட்டு சேர்ந்திசை முன்னோடி ஆசான் எம்.பி.ஸ்ரீனிவாசனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டன.

தற்போது புதியதாக‌ திருமதி ராஜரஜேஸ்வரி அவர்களின் இசையமைப்பில் தயாராகியுள்ள பாடல்கள்:‍

1. அந்த புறாக்கள் அஃறிணை = விகடன் புதுக் கவிதை = மத நல்லிணக்கம்.
2. ப்ராகாரம் நுழைந்தவுடன் = விகடன் புதுக் கவிதை = மத நல்லிணக்கம்.
3. நாரை நடக்கும் குளத்திலே = விகடன் புதுக் கவிதை = சின்ன சின்ன ஆசைகள்
4. காக்கைச் சிறகினிலே = பாரதியார்
5. ஜெய ஜெய பாரத = பாரதியார்
6. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், குழலினிது யாழினிது, மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ஒழுக்கம் விழுப்பம் தரலான், கற்க கசடற, துப்பார்க்கு துப்பாய, நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் ஆகிய திருக்குறள்கள்.

மேலும் இந்த பட்டியல் நீளும். பாடல்கள் அனைத்தும் இசை குறிப்புகளோடு இப்பக்கங்களில் வரும்.