Wednesday, October 21, 2009

திருக்குறள்

திருக்குறள்: திருவள்ளுவர்
இசை: ராஜராஜேஸ்வரி

ராகம்: ஹம்ஸத்வனி

ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.

ராகம்: தேஷ்

குழல் இனிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

ராகம்: மாயாமாளவ‌

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

ராகம்: பெஹாக்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ராகம்: சங்கராபரணம்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

ராகம்: கௌரிமனோஹரி / படுதீப்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழொக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

Tuesday, October 20, 2009

அணுவை ஒழிப்போம்.. அமைதி வளர்ப்போம்

இசை: ராஜராஜேஸ்வரி
பாடல்:

வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்
மனித ஜாதியும் ஒன்றுதான்
உள்ளம் ஒன்றுதான் ‍‍உண்மை ஒன்றுதான்
உலக நீதியும் ஒன்றுதான்

ஆவி குடிக்கும் ஆயுதமெல்லாம்
அலை கடலுக்குள் விழவேண்டும்
இன்னொரு யுத்தம் இந்த பூமியில்
இல்லை என்றொரு நிலை வேண்டும்

கொஞ்சும் புறாக்கள் பீரங்கிக்குள்
கூடுகட்ட ஒரு இடம் வேண்டும்
கோடு கிழிக்கும் நாடுகள் எல்லாம்
கொள்கையை நெருங்கி வரவேண்டும்

யுத்தம் எதிர்ப்போம் அன்பை விதைப்போம்
அணுவை ஒழிப்போம் அமைதி வளர்ப்போம்....

Saturday, October 3, 2009

பிராகாரம் நுழைந்தவுடன் ........

பாடல்: ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி

ப்ராகாரம் நுழைந்தவுடன் கனியாகிவிடுகிறது ‍ எலுமிச்சை
ப்ராகாரம் நுழைந்தவுடன் தீர்த்தமாகிவிடுகிறது தண்ணீர்
ப்ராகாரம் நுழைந்தவுடன் ப்ரசாதமாகிவிடுகிறது திருநீரும் பொட்டும்
எந்த மாற்றமும் இன்றி வெளியேறுகிறான் பக்தன்

ஐ ஆம் லிவிங்?

பாடல்: தாயம்மாஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி

நாரை நடக்கும் கொளத்தில நண்டு புடிச்சதில்ல‌
முங்கு நீச்சல் போட்டியில மூச்சு திணறியதில்ல‌
கண் பறிச்சு வெல்லமிட்டு கட தேங்கா தின்னதில்ல‌
அடுக்கு பான அரிசி திருடி ஆத்துச் சோறு ஆக்கியதில்ல‌
ஆனாலும் சொல்கிறாய் ஐ ஆம் லிவிங் என்று

அந்த புறாக்கள்........

பாடல்: நெல்லை ஜெயந்தன்ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி


அந்த புறாக்கள் அஃறிணை
குருத்வாரா ஒரமும் கூட்டமாய் இரை தேடலாம்
சிலுவைகள் மீதமர்ந்தும் சிறகுகள் கோதலாம்
தர்கா வாசலில் தண்ணீர் பருகலாம்
ஊர்வலமாய் தெரு எது வழியும் திரும்பலாம்
எல்லாம் முடிந்து கோபுர உச்சியில் கூட்டில் அடையலாம்
தெரிந்தால் சொல் திணை மாறும் வழி.