Friday, November 5, 2010

நாட்டுபுற பாடல்

ஏஹேஹே....... சல் சல் சல் சல் ..........

வாழக்கா ஏத்தும் வண்டி வடசேரி போகும் வண்டி
வாழக்கா வித்தோடனே வளயல் பண்ணி போடுறேன்

ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி
ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி

சல் சல் சல் சல் ..........

பூசணிக்கா ஏத்தும் வண்டி பூலோகம் போகும் வண்டி
பூசணிக்கா வித்தோடனே பொடவ வாங்கித் தாரேன்

ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி
ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி

பிச்சி பிச்சி பிச்சி பிச்சீ
மாமோ பிச்சிப் பூ மல்லிக பிச்சிப்பூ (5)

ஏரியிலே எலந்தம்பழம் என் தங்க வச்ச மரம்
காயும் இல்ல பூவும் இல்ல கண்டவுக வச்ச மரம்

மாமோ பிச்சிப்பூ மல்லிக பிச்சிப்பூ (5)

பொண்ணு வருது பொண்ணு வருது
பொட்டி வண்டியிலே
பொண்ண பெத்த தாயார் வருது
டொக்கு வண்டியிலே

மாமோ பிச்சிப்பூ மல்லிக பிச்சிப்பூ (5)

அத்தான் வந்தாங்க அத்தான் வந்தாங்க‌
ஆத்தங்கரையிலே பாவக்காய அறுக்கச் சொன்னாங்க‌
அத்தான் வந்தாங்க அத்தான் வந்தாங்க‌
பின்னே கொஞ்சம் நெய்ய ஊத்தி வறுக்கச் சொன்னாங்க
கம கம கம கம உம் ... ஹா‌
பின்னே கொஞ்சம் நெய்ய ஊத்தி வறுக்கச் சொன்னாங்க
அத்தான் வந்தாங்க அத்தான் வந்தாங்க‌

தும் ஹும் தும் ஹும் ......
தன்னே நானே நானே நன்னே நானே நன்னே
ஆமாம் சொல்லு
தன்னே நானே நானே நன்னே நானே நன்னே
அப்படி சொல்லு

மூக்குத்தி தன்னே நானே மினு மினுங்க‌
முகமெல்லாம் த்ன்னே நானே சோதி மின்ன‌
தன்னே நானே..................

சாந்திடிக்க தன்னே நானே சருகுதிர‌
சாந்து மேலே தன்னே நானே பூவுதிர‌
தன்னே நானே ...................

கப்பி கட்டை தன்னே நானே கலகலங்க‌
கை வளையல் தன்னே நானே சோதி மின்ன
தன்னே நானே ................

உழுது தொளி கலக்கி ஒண்ணு ரெண்டா நாத்தரிச்சு
பழுதுபடாமலிங்கு பக்குவமா நட்டு வாங்க‌

நாத்தரிச்சு நானறியேன் நடவு நட்டு நானறியேன்
சேத்துக்குள்ள எறங்கிக்கிட்டு செல்ல முகம் வாடுறேனே

தண்டட்டி போட்ட புள்ளே தானா வளர்ந்த புள்ளே
மேலேடு போட்ட புள்ள அடி தங்கமே தங்கம்
மெலியறேண்டி ஒன்னாலே அடி தங்கமே தங்கம்
மெலியறேண்டி ஒன்னாலே

தோச திங்க ஆசையாகுதே பட பட பட சுட சுட சுட (3)
சொய்ங்...................... ஹாங்
பச்ச மொளகா நறுக்கி வச்சு
பசுவ வெண்ணை உருக்கி வச்சு
பத்து தோச அடுக்கி வச்சு
பப்படத்த பொரிச்சு வச்சு
தோச திங்க...ஆ
தோச திங்க ஆசையாகுதே பட பட பட சுட சுட சுட (3)

ஆஹா .... ஓஹோ

புன்னை மரத்து கொம்பை வளைத்தொரு
தொட்டில் தொங்குது அதில்
பூவினைப் போல மேனி படைத்த
குழந்தை துங்குது
ஆரிரோ ஆராரோ ... ஆரிரோ ஆராரோ

என்ன நினைத்து காலை உதைத்து பாப்பா சிரிக்குது
அதன் சின்ன சின்ன மணி கண்ணுக்குள்ளே
ஒரு நாடகம் நடக்குது

புன்னை மரத்து ..........

No comments:

Post a Comment