Sunday, April 26, 2009

விடுதலைப் போரினில்.....

பாடல் : ம ணவாளன் இசை : எம் பி ஸ்ரீனிவாசன்

சுருதி : 1

விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே
தோழா ...... தோழா....
வீரர் உமக்கே வணக்கம் வணக்கம்
தோழா.... தோழா.... (விடுதலை)

காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில்
தாரகை போன்று ஜொலித்து நிற்கின்றீர்
போரிடும் எமக்கு புத்துயிர் தாரீர்
தோழா.... தோழா.... (விடுதலை)

இந்திய நாட்டின் விடுதலைப் போரில்
எண்ணற்ற வீரரை அர்ப்பணம் செய்தோம்
இதயக் கனவுகள் ஈடேறும் சத்யம்
தோழா.... தோழா.... (விடுதலை)

ஆயிரம் ஆயிரம் தோழர்கள் ரத்தம்
குடித்தெழுந்தே நிற்கும் கோரச் சமூகம்
தகர்த்தெறிவோம் மக்கள் சக்தியினாலே
தோழா.... தோழா.... (விடுதலை)

No comments:

Post a Comment