Friday, May 1, 2009

பிரம்ம தேவன் கலையிங்கு நீரே

பாடல்:பாரதியார் இசை: எம். பி. சீனிவாசன்
சுருதி : 6 1/2

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
யந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நன் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல்
ஆயிரந்தொழில் செய்திடுவீரே
பெரும்புகழ் நுமக்கே யிசைக்கின்றேன்
பிரம்ம தேவன் கலையிங்கு நீரே

தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ
தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ

மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே
மரத்தை வெட்டி மனை செய்குவீரே

தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ
தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ

உண்ண காய்கனி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணை பால் நெய் கொணர்ந்திடுவீரே
இழையை நூற்று நல்லடை செய்வீரே
விண்ணின்றெமை வானவர் காப்பார்
மேவிப்பார்மிசை காப்பவர் நீரே

தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ

பாட்டும் சேய்யுளும் கோத்திடுவீரே
பரத நாட்டிய கூத்திடுவீரே

தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ

காட்டும் வையப் பொருள்களின் உண்மை கண்டு
உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே
நாட்டிலே அறம் கூட்டிவைப்பீரே
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே
தேட்டமின்றி விழி எதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே

No comments:

Post a Comment