Saturday, October 16, 2010

பூமி

அறிவொளி இயக்கப் பட்டறையில் உருவானது

ஆண்டுகள் ஆண்டுகளாய்
நம்மின் நினைவுகளில்
என்றும் அழியாதொரு பூமி
வருமொரு தலைமுறைக்கு நாமும்
திருப்பித் தரவேண்டிய‌
ஜன்ம கடனல்லவோ பூமி

இது நம் முன்னோடிகள் தந்த சொத்தல்ல‌
இது கயமைக் கூட்டத்தார் சுரண்டிக் கொழுத்திட‌
அளவின்றி சுரக்கும் பாத்திரமல்ல‌

மலைகளை மார்பில் தழுவிக்கிடக்கும் தரைகளில்
இச்சமவெளிகளில்
யுகாந்திரங்கள் பலவாய்
இம் மண்ணில் தணலும்
தண்மையும் மரமும் தளிருமாய்

உள்ள கிளர்ச்சி தரும் பேரெழிலாய்
மர நிழலில் தாலாட்டி மடி மீதில் கிடத்தி
தலைமுறைகள் பலவற்றை ஊட்டி வளர்த்து

இடியைப் பிறப்பிக்கும் கொடு மின்னல்கள்
நம் இதயங்களை கீறி பாய்ந்த போதில்
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து
அவளே அபயமளித்தாள் மடி தந்து
தரையின் நேசம் போல் வழிந்தொழுகும் நதிகள்
நம்மின் தாகங்களுக்கு குளிர் நீர் ஈந்து
நம்முள் எரியும் பசித்தீ தணித்திட‌

வயல்களில் கதிர்கள்
மரங்களில் கனிகள்

நம்மின் அந்தி வானம் சிவந்திட‌
குருதியில் மூழ்கிடும் சூரியன் உயர்ந்திடும் சந்திரன்
நம்மின் இரவுகளை பால் கடலில் குளிர்ப்பிக்க‌
புலரும் வரை எரிகின்ற சந்திரன்

எங்கே பால் நிழல் சுரக்கும்
மரமெல்லாம் எங்கே?

அலறி வரும் கொடுவாளின்
பல்லில் சிதையும்
தூரத்து மாளிகையின் பணப்பெட்டி நிறையும்

எங்கே மண்ணின் விரி மார்பில் கசிந்தொழுகும் நதிகள்
கழிவும் கிருமியும் நதியில் கலந்திட‌
ஆஸ்திகள் மாளிகை மேலும் உயரும்

விழித்திடுக விழித்திடுக விழித்தெழுந்திடுக‌
எழுந்திடுக விழிதெழுந்திடுக‌

பழங்கால தலைமுறைகள் சீதனமாய் தந்ததொரு
பாட்டன் சொத்தல்ல பூமி

வருமொரு தலைமுறைக்கு நாமும்
திருப்பித் தர வேண்டிய ஜென்ம கடனல்லவோ பூமி
மனிதனை மனிதனாய் மாற்றிய பூமி
கொடியவர்கள் பாலைவனமாக்கும் இப்பூமி
சோலை வனமாகட்டும்
இனி நம் கையில் பூமி

No comments:

Post a Comment